Skip to main content

பட்டா கேட்ட பெண்ணுக்கு பளார்... சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

BJP minister caught in controversy

 

நலத்திட்ட உதவிகள் வழங்கும் மேடையில் பாஜக அமைச்சர் ஒருவர் பெண்ணை கன்னத்தில் பளாரென அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் அங்கலா என்னும் கிராமத்தில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்நாடகா உள்கட்டுமான மேம்பாட்டுதுறை அமைச்சர் சோமன்னா கலந்து கொண்டார். அப்பொழுது தனக்கு பட்டா வேண்டும் என பெண் ஒருவர் சோமன்னாவின் காலில் விழுந்து கதறி அழுதார். அப்பொழுது கோபமான அமைச்சர் சோமன்னா பளார் என பெண்ணின் கன்னத்தில் அறை விட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்