Skip to main content

சப் இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்த சாராய வியாபாரம்... ஆட்டோ சங்கர்  #5  

Published on 25/05/2018 | Edited on 01/06/2018
street fight



ஜெகதி ஆச்சரியத்தில் வாய் பொளந்தா!

"இத்தனையும் வாங்க ஏது பணம்?''

யார் கிட்டேயோ கடன் வாங்கினதா பொய் சொன்னேன்!

பலநாள் பட்டினி கிடந்த பொண்டாட்டி, பிள்ளைங்க வயிறார சாப்பிடுவது பார்த்து எனக்குக் கண்ணீர் ததும்பிச்சு.

புயல் மழையெல்லாம் ஓய்ஞ்சு வெயில் வரவரைக்கும் கடைவீதியிலே மாமூல் கேட்கறதுதான் வழின்னு தீர்மானிச்சேன். வேலைக்குப் போறதா வீட்டிலே பொய் சொல்லிட்டு கடைவீதி போவேன். ஒருநாள் விட்டு ஒருநாள் ஒவ்வொரு கடையிலும் மாமூல் கேட்பேன். தர மறுத்தால் கடை பெஞ்சிலே இருக்கிற இரு பிஸ்கட் பாட்டிலை மட்டும் கீழே போட்டு உடைக்கிறது.  அரண்டு போய் பத்து, இருபதுன்னு மாமூல் நீட்டுவாங்க. வசூலான பணத்தையெல்லாம் நாடார்கிட்டேயே கொடுத்து வச்சு வாரக்கடைசியிலே மொத்தமா வாங்கிப்பேன்.

நான் இருந்த இந்திரா நகருக்கும் பக்கத்திலே இருந்த தரமணிக்கும் அப்ப பெரிசா ஊர் சண்டை வந்தது. எங்க ஏரியாவிலே நான் வஸ்தாதா இருந்ததாலே இங்கே 'ராணுவ'ப்பொறுப்பு (!) எனக்கு வந்தது.

அடுத்த ஊர் ரௌடிகளைச் சமாளிச்சாதான் சொந்த ஊர்லே "தாதா' பதவி நீடிக்கும். இல்லையானா செல்லாக்காசு! 

எங்க பகுதியிலேயே பத்து, பதினைந்து சில்லறை தாதாக்களை துணைக்கு சேர்த்துகிட்டு தாக்குதல்லே இறங்கினேன். ரெண்டு கோஷ்டிக்குமான சண்டை படுபயங்கரமா வளர்ந்துச்சு. போலீஸ் என்னைத் தேட ஆரம்பிச்சது.

 

street fight



ஒருநாள் இந்திராநகர் பஸ் ஸ்டாண்டிலே நான் க்ரூப்போட உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தப்ப ஒரு போலீஸ்காரர்   சைக்கிள்ளே வேகமா வந்து என்கிட்ட நிறுத்தினார்! போலீஸைப் பார்த்ததும் என் சீடர்கள் எல்லாரும் சிட்டாப் பறந்துட்டாங்க!நான் ஓடல. ஓடறதா வேணாமான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கிறப்ப, அவர் கிட்ட வந்தார். ஒருமாதிரி தில்லா எழுந்து நின்னு அவரைப்பார்த்தேன், கைலியைத் தூக்கிகட்டிக்கிட்டே...!என் கை காலெல்லாம் சிலிர்த்துச்சு!

போலீஸ்காரரைப் பக்கத்திலே பார்த்ததும்தான் தெரிஞ்சது... என்னை நாடார்   கடையிலே உரிச்சு உப்புகண்டம் போட்டாரே... அதே போலீஸ்காரர். எனக்கு ஆத்திரத்திலே கண்ணெல்லாம் சிவந்தது. கையிலே நடுக்கம்.

அவர் என்ன நினைச்சாரோ, என்கிட்டே சமாதானமா பேச ஆரம்பிச்சார்.

"சப்-இன்ஸ்பெக்டர் உன்னிடம் ஒரு விஷயம் பேசச்சொன்னார். வா, அப்படிப்போய் பேசலாம்!''

பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலே இருந்த டீக்கடைக்குப் போனோம்.

"சங்கர்...! நீ இப்படி ரௌடியா இருந்து மாமூல் கேட்டு சம்பாதிக்கிறதைவிட, அதிகமா சம்பாதிக்கலாம்...     சாராயம் வித்தா! அப்படியே எங்களையும் கவனிச்சுக்கலாமில்ல.. "அய்யா' இதை உன் காதிலே போடச்சொன்னாரு''

எனக்கு "திக்'குன்னு ஆயிடுச்சு. சாராயம் விற்கிறதா? அதற்கெல்லாம் எவ்வளவு முதலீடு வேணும்? ஆளு படை வேணும்?

 

 


"யோசிக்காதே சங்கர்! ரௌடித் தொழிலையும் நீ வீட்டுரலாம். வருமானமும் அதிகரிக்கும். இருபத்தஞ்சு ரூபா முதல்   இருந்தா போதும்! 19பி பஸ் பிடிச்சு நாவலூர் போ. அங்கே டில்லின்றவர் சாராயம் விற்கிறாரு. அவர் கிட்டே நான்   அனுப்பினதா சொல்லு! என் பேரு சுகுமார், டில்லி நல்ல சரக்கா கொடுப்பாரு... எடுத்துக்கிட்டு வந்து வியாபாரம்  தொடங்கு. ரிக்ஷாகாரங்க... கூலி வேலை செய்றவங்க எல்லார்கிட்டயும் முதல்லேயே சொல்லிடு. ஜெயந்தி தியேட்டர்   பின்பக்கம் முட்புதர்லே வியாபாரத்தைத் தொடங்கு... என்ன சொல்றே....?''

நான் சம்மதம் சொல்லாம இருக்கவும், "சாயங்காலம் நீ ஸ்டேஷன் வந்து அய்யாவைப் பாரு'' என்றார். சாயங்காலம் 'அய்யா' ரவுண்ட்ஸ் புறப்படத் தயாரா இருந்தார். என்னைப்பார்த்ததும் ஸ்டேஷனுக்குள்ளே தனியா கூட்டிப்போனார்.

 

 


"என்ன... பிசினஸ் என்னிக்கு ஸ்டார்ட் பண்ணப்போறே?''

"இ...இல்ல ஸார்! நான் அதெல்லாம் செய்யணுமான்னு யோசிக்கிறேன்''னேன்.

அவருக்கு முகம் இறுகிச்சு.

"சங்கர்! நீ எனக்குத் தோதா இருப்பேன்னு நம்பித்தான் இதுவரைக்கும் உன்னை கைது பண்ணல. புரியுதா? போலீஸ்   அடியைப் பார்த்ததில்லையே நீ...!''

"கொஞ்சம் யோசிக்க டயம் கொடுங்க ஸார்.''

"இருபத்தஞ்சு ரூபா மட்டும் இன்வெஸ்ட் பண்ணு. குபேரனாயிடலாம்! நீ மாமூல் வாங்கின பணத்திலேருந்து இருபத்தஞ்சு  ரூபாய் பணம் கொண்டு வந்துடாதே! உழைச்ச பணமா இருக்கட்டும்.''

 

 

arrack



யோசிச்சுப் பார்த்தேன். தெரிஞ்சோ தெரியாமலோ ரௌடி வேடம் போட்டாச்சு. இனி நீடிச்சுதான் ஆகணும். போலீஸ்  மொத்தமும் என்னைப் பழிவாங்கணும்னு கிளம்பினா சமாளிக்க முடியாது. பேச்சை மறுத்தா நிச்சயம் பழிவாங்குவாங்க! இவங்களுக்கு கேஸுக்கு ஆள் கிடைக்காதப்ப எல்லாம் என்னை சந்தேகக்கேஸ்ல கொண்டுவந்துடுவாங்க. வீடு  முச்சந்திக்கு வந்துடும். என்கிட்டே எதிர்க்க பலம் இல்லே!

ஜெகதியோட மூக்குத்தியை அடமானம் வச்சு பணம் புரட்டினேன். மூக்குத்தி உழைச்ச பணத்துல வாங்கினது! டில்லிக்கிட்டேயிருந்து சரக்கை வாங்கி வந்தாச்சு. முதல் நாள் விற்பனைக்கு ஆயத்தமானேன். என்னைச்சுற்றிலும் போலீஸ் பட்டாளம்! சப்-இன்ஸ்பெக்டர் அவர் கையாலே ஊதுபத்தி ஏத்தி வியாபாரத்தைத் தொடங்கிவச்சார்!


 முந்தைய பகுதி:

'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்! ஆட்டோ சங்கர் #4
 

அடுத்த பகுதி:

சாராயத்தோடு செக்ரட்டேரியட்டுக்குப் போன கதை! - ஆட்டோ சங்கர் #6 

 

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23