Skip to main content

வைகோவை தலைவராகவும், குருநாதராகவும் ஏற்றுக்கொண்டேன்: நாஞ்சில் சம்பத் பேட்டி

Published on 19/03/2018 | Edited on 19/03/2018



 

vaiko-nanjil-sampath


அரசியலில் இருந்து விலகுவதாகவும், இலங்கிய மேடையில் தன்னை காணலாம் என்றும் அறிவித்த நாஞ்சில்சம்பத், ஸ்டாலின் முதல்வராவார் என பேட்டி அளித்திருந்ததையடுத்து திமுகவுக்கு செல்வார் என்றும், வைகோவை சந்தித்து மதிமுகவுக்கு சென்றுவிடுவார் என செய்திகள் பரவின.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு நாஞ்சில் சம்பத் பேட்டி அளித்தார்.
 

ஸ்டாலின் முதல்வராவார்... ராகுல் பிரதமராவார் என்று கூறியிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறதே... இருவருமே பலவீனமானவர்கள் என்று அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுபவர்கள். அவர்கள் வெல்வார்கள் என்று எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?
 

என்னிடம் போகிற போக்கில் கேட்டார்கள். இப்போதைக்கு தேர்தல் வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்றார்கள். திமுகவுக்குத்தான் அந்த வாய்ப்பு இருக்கிறது என்றேன். ஸ்டாலின் பெயரைக்கூட சொல்லவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் மன்னித்துவிட்டார் என்று சொன்னதன் மூலம் வானத்தன் உச்சிக்கு போய்விட்டார் ராகுல். அவர்களை மன்னித்துவிட்டேன் என்று சொன்னால் மட்டும்போதாது. அவர்களை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளுக்கும் ராகுல்காந்தி தன்னுடைய பங்களிப்பை தந்தால் அவர் இன்னொரு அண்ணல் காந்தியாக மாறுவார் என்று சொன்னேன். இனி வருகிற தேர்தல்களில் தேசத்தை ஆளுகிற பிரதமர் என்கிற மகுடம் அவருக்கு கிட்டும் என்று சொன்னேன். 
 

அரசியலைத் தாண்டியும் உங்கள் வாழ்வில் முக்கியமானவர் வைகோ. இனி இலக்கிய மேடைதான் என நீங்கள் முடிவு எடுத்திருக்கும் இந்த நேரத்தில் வைகோவைப் பற்றி நினைக்கிறீர்களா?
 

ஆமாம். 18 ஆண்டுகாலம் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். கனவுகள் காணுகிற கால்சட்டை பருவத்தில் அவரை அப்போதே என்னுடைய தலைவராகவும், குருநாதராகவும் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, அவருடைய விவாதத்திறமை, அவருடைய பேச்சாற்றல், அவருடைய மனிதாபிமானம் எல்லாம் என்னை கவர்ந்தது. நான் மிகவும் மதித்து போற்றிய தலைவர். இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் 9 பிரதமர்களை கேள்விக்கணைகளால் திகைக்க வைத்தவர். காமராஜருக்கு பிறகு தென் தமிழகத்தில் இருந்த ஒரு தலைவருடைய செல்வாக்கு வடபுலத்தில் இருந்தது என்றால், அந்த வரலாறு வைகோவுக்கு மட்டும்தான் சொந்தம். 
 

வைகோவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா?
 

இனி இலக்கிய மேடைதான். நான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறேன்.

இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.