Skip to main content

அந்த நடிகர் மேல் செக்ஸ் புகார் கூற ஐந்து கோடி வாங்கிய 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி  

Published on 21/04/2018 | Edited on 23/04/2018
sri reddy


சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.  

மேலும் "பவன் கல்யாண் இளம்பெண்களை வைத்து மசாஜ் செய்து கொள்கிறார். அந்த பணிக்கு பெங்காலி பெண்களையே தேர்வு செய்கிறார்" என்று குற்றம்சாட்டி கேவலமாக பேசினார் ஸ்ரீரெட்டி. இதையடுத்து பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டனர். மேலும் அவருக்கு மிரட்டல்களும் வந்தன. இதனால் பயந்துபோன ஸ்ரீரெட்டி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பின்னர் தனக்கு ரூ.5 கோடி தருவதாக பின்னால் இருந்து ஒருவர் தூண்டியதால் பவன் கல்யாணை தவறாக பேசினேன் என்றார்.

sri reddy

இதற்கிடையே பவன் கல்யாணுக்கு எதிராக ஸ்ரீரெட்டியை தூண்டிவிட்டது நான்தான் என்று பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா கூறினார். இந்நிலையில் இவர்களின் செயல்களால் கடும் கோபமடைந்த பவன் கல்யாண் ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில்..."ஸ்ரீரெட்டி மூலம் அரசியல் ரீதியாக என்னை களங்கப்படுத்த முயற்சி நடந்து இருப்பது நிரூபணமாகி உள்ளது. இதற்காக ரூ.10 கோடி பேரம் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதில் ரூ.5 கோடியை ஸ்ரீரெட்டிக்கு தருவதாக கூறியுள்ளனர். இதன் பின்னணியில் டைரக்டர் ராம்கோபால் வர்மா மட்டுமின்றி சந்திரபாபுவின் மகனும் அமைச்சருமான லோகேசும் இருக்கிறார். சந்திரபாபு நாயுடு மேற்பார்வையில்தான் என்னை பழிவாங்க முயற்சிகள் நடந்துள்ளன". என பதிவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்