Skip to main content

100 பெண்களிடம் சில்மிஷம் செய்த தயாரிப்பாளர்....'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி மீண்டும் புகார்

Published on 18/04/2018 | Edited on 19/04/2018

sri reddy


சமீபத்தில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரங்கள் தெலுங்கு பட உலகில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறியுள்ளார். அதில்..."தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் 16 வயது சிறுமிகளும் உண்டு" என்று தன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து நடிகை 'ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான். எங்களுக்கும் அப்பாராவ் பாலியல் தொல்லை கொடுத்தார்' என்று பல பெண்கள் ஐதராபாத்தில் உள்ள டெலிவிஷன் சேனலுக்கு போன் செய்து புகார் கூறியது திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதற்கு தெலுங்கு திரைப்பட துறையினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகை ஸ்ரீரெட்டி கூறியதில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்