Skip to main content

பாகுபலி டீமில் இணையும் கீர்த்தி சுரேஷ் 

Published on 02/07/2018 | Edited on 02/07/2018
keerthy suresh

 

 

 

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். தற்சமயம் ஆர்.ஆர்.ஆர் என்று பெயர் வைத்துள்ள இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது  சமீபத்தில் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேசின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் இயக்குனர் ராஜமவுலியும் பாராட்டியிருந்தார். இதனால் ராஜமவுலியின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என அண்மையில் தகவல்களும் வந்தன. தற்போது அது இந்த அறிவிப்பு மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் இதில் யாருக்கு ஜோடியாகவுள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து பின்னர் படம் 2020ஆம் ஆண்டு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்