Skip to main content

அவர் மீதான குற்றச்சாட்டின் ஆதாரத்தை வெளியிடுவேன்... 'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டி எச்சரிக்கை  

Published on 20/04/2018 | Edited on 21/04/2018
sri reddy


சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து நடிகை ஜீவிதா ஸ்ரீரெட்டியின் செயல்களை கண்டிக்கும் வகையில்...'ஸ்ரீரெட்டி ஒரு வீடியோவில் 24 மணிநேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பதாக கூறியுள்ளார்'. மேலும் 'இதைப் பார்த்த பிறகுமா அவரது பேச்சை நம்புகிறீர்கள்'. என ஸ்ரீரெட்டிக்கு எதிராக பேசினார். மேலும் தனக்கு எதிராக அவதூறு வெளியிட்டதற்காக வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்து ஸ்ரீரெட்டியின் ஆபாச வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். 

 

இந்நிலையில் நடிகை ஜீவிதாவின் செயல்பாடுகளால் கோபமடைந்த ஸ்ரீரெட்டி அவருக்கு பதில் அளித்து பேசியபோது..."திரையுலகில் சினிமா வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் அவலத்தை எதிர்த்து வருகிறேன். இந்த போராட்டத்தை நான் கைவிடப்போவது இல்லை. எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. எனது எதிர்ப்புகளை சீர்குலைக்கவும் முயற்சிகள் நடக்கிறது. நான் பயப்படமாட்டேன். எனது போராட்டத்தை நசுக்க நினைப்பவர்கள் முதலில் என்னை கொலை செய்து விட்டு உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுங்கள். நடிகர் ராஜசேகர் பற்றிய புகாரில் உண்மை இல்லை என்று ஜீவிதா கூறியிருக்கிறார். நடிகர் ராஜசேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. விரைவில் வெளியிடுவேன்” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்