Skip to main content

மிரட்டும் புஜாரா, திணறும் ஆஸ்திரேலியா; வலுவான நிலையில் இந்திய அணி

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

sdZ

 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த தொடர் முழுவதும் சோபிக்காத ராகுல் இந்த ஆட்டத்திலும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த புஜாரா நிதானமாக விளையாடி, இந்த தொடரில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். இதனையடுத்து மயங்க் அகர்வால் 77 ரன்களிலும், கோலி 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் முடிவில் புஜாரா 130, ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.