Skip to main content

இரண்டு சாதனைகள் படைத்த தவான்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Shikhar Dhawan

 

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஷிகர் தவான் இரண்டு சாதனைகள் படைத்துள்ளார்.

 

13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 38 -ஆவது லீக் போட்டி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் நேற்றைய போட்டியில், அதிரடியாக விளையாடி, ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இவர், சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியிலும் சதம் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து இரு சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

 

மேலும், ஐ.பி.எல் தொடரில் 5,000 ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற பட்டியலிலும் இணைந்துள்ளார். ஷிகர் தவான் இந்தப் பட்டியலில் இணைந்த ஐந்தாவது வீரர் ஆவர். இதற்கு முன்பு, இப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் முறையே விராட் கோலி, ரெய்னா, ரோகித் ஷர்மா, டேவிட் வார்னர் உள்ளனர்.