Skip to main content

இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021


 

shardhul thakur hardhik pandya axar patel

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை, வரும் அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் இடம்பெற்றிருந்தார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஷார்துல் தாகூர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் தற்போது இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக ஷார்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.  அக்ஸர் படேல்  ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

ஹர்திக் பாண்டியா பந்து வீசுவார் என்பதைக் கருத்தில் கொண்டு, மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே முதலில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா பந்து வீசுவது சந்தேகம் என்பதால் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக ஷார்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அண்மைக்காலமாக ஷார்துல் தாகூர் பேட்டிங்கிலும் செழித்து வருவது குறிப்பிடத்தக்கது.