Skip to main content

ஆர்.சி.பி. கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் விராட் கோலி!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

R.C.P. Virat Kohli resigns as captain

 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குப் பின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து பெங்களூரு அணிக்காக விளையாடுவேன். ஐபிஎல்- லில் நான் விளையாடும் கடைசி போட்டி வரை பெங்களூரு அணிக்காக விளையாடுவேன். 

 

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, தற்போது பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.