Skip to main content

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்; ரோகித் பங்கேற்கவில்லையென்றால் கேப்டன் யார்?

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

ROHIT SHARMA

 

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் ரோகித் சர்மா அண்மையில் நியமிக்கப்பட்டார். ஆனால் பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதனால் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.

 

ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு குணமாகிவிடும் என்றும், எனவே அவர் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஒருவேளை ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லையென்றால், அணியை வழிநடத்தப்போவது யார்? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

இந்தநிலையில்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரோகித் சர்மா பங்கேற்க முடியாமல் போனால், கே.எல்.ராகுல் அணியை வழி நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.