Skip to main content

சென்னை கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை!!

Published on 25/06/2018 | Edited on 25/06/2018

சென்னை நேப்பியர் பாலத்தில் பயாஸ் எனும் 30 வயது மக்கித்தக்க இளைஞர் கூவம் ஆற்றில் தற்கொலை செய்துள்ளார்.

 

சென்னை மவுண்ட் ரோட்டில் வசித்துவரும் இளைஞர் பயாஸ். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் கம்பெனியில் வேலைசெய்துவந்த இவர் சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார்.

 

sucide

 

 

 

இதனையடுத்து இன்று சென்னை நேப்பியர் பலத்திற்கு வந்த அந்த இளைஞர் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் தன்னை இறுதியாக பார்க்க விரும்புவார்கள் வாருங்கள் என தொலைபேசியின் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். இதை கேட்ட இவரது நண்பர் ஒருவர் நேப்பியர் பலம் அருகே வந்துள்ளார். அவரிடம் தனது மொபைல் மற்றும் இருசக்கர வாகனம்  என அனைத்தையும் என் வீட்டில் சேர்த்து விடுங்கள் என கூறிவிட்டு பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

 

 

 

 

இந்த தகவலை அறிந்த எக்மோர், திருவல்லிகேணியை சேர்ந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தற்கொலை செய்துகொண்ட பயாஸின்  உடலை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தற்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதையும் போலீசார் சரிசெய்து வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

சார்ந்த செய்திகள்