Skip to main content

70 ரூபாய்க்காக நடந்த சண்டை... ஒருவயது குழந்தை...

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

70 ரூபாய்க்காக உறவினர்களிடையே நடந்த சண்டையில் ஒருவயது குழந்தை அடிபட்டு இறந்தது அந்த சுற்று வட்டாரப்பகுதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 
 

trichy


திருச்சி, முசிறி அருகே தொட்டியம் கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கர், குழந்தையை வைத்துக்கொண்டிருந்த அவர், அப்படியே வெளியில் வந்து உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.  அவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது உறவினர்களில் ஒருவரான செந்தில் மற்றொரு உறவினரான ஆனந்த் என்பவரின் சட்டைப்பையிலிருந்த 70 ரூபாயை எடுத்துள்ளார். அதைப்பார்த்த ஆனந்த் பணத்தை கேட்காமல் எடுக்காதே, திருப்பிக்கொடு என்று ரெங்கர் கூறியதால் செந்திலுக்கும் அவருக்குமிடையே வாக்குவாதம் தொடங்கியது.

அந்த வாக்குவாதம் பெரிதாகிக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த செந்தில் அருகிலிருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரை அடிக்க முயன்றார். ஆனால் குறிதவறி அந்த அடி குழந்தையின் தலைமீது விழுந்தது. அவர் பலமாக தாக்கியதால் குழந்தை மயங்கி கீழே விழுந்தது. இதையடுத்து அந்தக் குழந்தையை திருச்சி தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்