Skip to main content

ஒன்றாம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; ரகசிய விசாரணையில் அதிகாரிகள்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

SEXUAL ABUSE

 

கோவை பன்னிமடையை அடுத்துள்ளது திப்பனூர். அங்கே உள்ள அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை  தற்போது நடத்தி வருகின்றனர். 

 

 

நேற்று மாலை பள்ளி முடிந்து  வெளியே வந்த அந்த ஒன்றாவது படிக்கும் குழந்தையை காணாமல் தேடி இருக்கிறார் அக்குழந்தையின் தாத்தா.  இன்று அதிகாலை 4 மணி அளவில்  கஸ்தூரி நாயக்கன் புதூர் என்கிற இடத்தில் கத்தியால்  அறுபட்ட காயங்களோடு ஒரு பள்ளத்தில் கிடந்தது அந்தக் குழந்தை. தற்போது போலீஸ் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்