Skip to main content

ரஜினியின் இந்துத்துவாவிற்கு எதிரான நிலைப்பாட்டை காட்டுகிறது- கராத்தே தியாகராஜன்

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

 

part 1

 

part 2


ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் குறித்து கராத்தே தியாகராஜன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,  ‘மத துவேஷங்களை கிளப்பும் வில்லன்களுக்கு எதிராக சூப்பர் ஸ்டார் இருப்பது. அவர் ஹிந்துத்துவாவிற்கு எதிரான நிலைப்பாட்டை காட்டுகிறது. இதில் ரஜினி சிறுபான்மையின மக்கள் எனது நண்பர்கள் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்திருக்கிறார். தமிழகத்தில் இதுவரை நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக பேசியிருக்கிறார். அப்போது படத்தில் வரும் வசனம், என் மண்ணையும் மக்களையும் சுரண்டி திண்ணவனுக்கு இதுதாண்டா முடிவு என்கிற அவரது அனல் தெரிக்கும் வசனம் மணற் கொள்ளையருக்கு எதிராக ஊதப்படும் அபாய சங்கு. இனவெறி, மதவெறி, ஜாதிக்கொடுமைகளுக்கு எதிராக பேட்ட திரைப்படம் ஓங்கி ஒலிக்கிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்