Skip to main content

ஓபிஎஸ் மகன் கார் மீது தாக்குதல்... கண்ணாடி உடைப்பு!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

OPS son car glass broken!

                                                                      கோப்புப்படம் 

 

தமிழகத்தில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

இந்நிலையில் துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸின் மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் கார் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் கார் கண்ணாடி உடைந்தது. இந்நிலையில், தன் கார் மீது திமுகவினர் கல்வீசித் தாக்கியதாக ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்