Skip to main content

தமிழ்நாட்டில் ஒமிக்ரான்..? - 7 பேரின் மாதிரிகள் ஆய்வு!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

ghj

 

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பரவிவரும் ஒமிக்ரான் தொற்று பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கரோனா வைரஸ், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 44 ஆக உயர்ந்துள்ளது. 

 

வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று, இரண்டு நாட்களாக தென்னிந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் 5க்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்