Skip to main content

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்; பீகார், டெல்லி விரைந்தது தனிப்படை

Published on 05/03/2023 | Edited on 05/03/2023

 

 North State Workers' Issue; Delhi, Bihar rushed to separate forces

 

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக முதல்வர் பிறந்தநாள் விழாவில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி பங்கேற்ற பிறகே இது தொடர்பான வதந்திகள் பெரிய அளவில் வெளியானதால் இதில் அரசியல் கட்சிகளின் பின்னணி இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பியது பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களே என்பது அம்பலமாகியுள்ளது.

 

இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் மீது உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ், வெளியானது போலியான வீடியோ, எனவே யாரும் பதற்றமடைய வேண்டாம் என நேற்று அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய நபர்களைப் பிடிக்க தமிழக போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவதூறு பரப்பிவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் டெல்லி, பீகார் விரைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்