Skip to main content

கோவை, சிவகங்கையில் என்ஐஏ திடீர் சோதனை!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

NIA raids Sivagangai, Coimbatore

 

கோவை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரில் மாவோயிஸ்ட் காளிதாஸின் சகோதரர் சிங்காரம் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. மாவோயிஸ்ட் காளிதாஸ் கேரள சிறையில் உள்ள நிலையில், தற்போது அவரது சகோதரர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல் கோவையில் 3 இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் வீடுகளில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுவருகிறது.

 

புளியகுளத்தில் மருத்துவர் தினேஷ் என்பவரது வீட்டிலும், டேனிஷ் என்பவரது வீட்டிலும் என 3 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. தேனியிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்