Skip to main content

பெரியார் குறித்த நூல்களை ஜப்பானிய மொழியில் வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு! (படங்கள்)

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

 

பெரியாரின் பிறந்த நாள் விழா பெரியார் திடலில் உள்ள பெரியார் மையம் அரங்கில் நடைபெற்றது. இதில் பெரியார் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் வைக்கம் போராட்டம் ஆகிய இரண்டு புத்தகங்கள் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது. இதனை இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு வெளியிட்டார். முதல் பிரதியை ஜப்பானிய தூதரக அதிகாரி மியூகி இனோஉவே சான் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திராவிட கழகத் தலைவர் வீரமணி, துணைத் தலைவர் கலி. பூங்குன்றம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்