Skip to main content

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். மரியாதை! (படங்கள்)

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

எம்.ஜி.ஆரின் 33- வது நினைவுநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்த்தூவியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். அதேபோல், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

 

அதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசித்தார். சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்த உறுதியேற்போம் என அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். 


 

சார்ந்த செய்திகள்