Skip to main content

மீ டூ புகார் - 7 வித்வான்களுக்கு தடை!

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
me too hashtag



மீ டூ பாலியல் புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக சங்கீத உலகிலும் எழுந்துள்ளது. இதையைடுத்து 7 கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

மீ டூ ஹேஷ்டேக்கில் பெண்கள் புகார் அளித்ததையடுத்து, அந்த புகார்களை சென்னை மியூசிக் அகாதமி ஆய்வு செய்தது. சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரன், கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், நாகை ஸ்ரீராம், திருவாரூர் வைத்தியநாதன் உள்பட 7 பேருக்கும் தடை விதிக்க சென்னை மியூசிக் அகாதமி முடிவு செய்துள்ளது. புகாருக்கு உள்ளானவர்களுக்கு இந்த ஆண்டு இசைக் கச்சரிகளில் வாய்ப்பு அளிக்க மறுப்பு தெரிவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்