Skip to main content

மேயரிடம் கையெழுத்து வாங்கிய மதிமுக கவுன்சிலர் 

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என். ரவியை நீக்கக் கோரி, ம.தி.மு.க சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை அன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாதாந்திர மாமன்றக்  கூட்டத்திற்கு வந்த 139வது வார்டு மதிமுக கவுன்சிலர் பா. சுப்பிரமணி, அனைத்து தரப்பு கவுன்சிலர்களிடமும் ஆர்.என். ரவியை அகற்றக்கோரி கையெழுத்து வாங்கினார். இதில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அனைத்து வார்டு மாமன்ற உறுப்பினர்களும் கையெழுத்து  இட்டுச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்