Skip to main content

ஆட்சி கலையும் எனக்கூறுவது கனவு அல்ல;நனவாகும்- ஸ்டாலின் பேச்சு!!

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

 

DMK

 

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரக்கூடும் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,

 

 ஓபிஎஸ்சை சேர்த்து 11 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை என்னவாகும். ஏனென்றால் அவர்கள் பதவியில் இருக்கலாமா? இருக்க கூடாதா? என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அதற்கான தீர்ப்பு வரப்போகிறது. அப்படி வருகிறபோது நிச்சயமாக தமிழ்நாட்டிலே எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி இருக்கப்போவதில்லை. இதை சொன்னால் எடப்பாடி சொல்வார், ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார் என்று,  கனவு எல்லாம் காண வேண்டாம் நனவாகவே அது நடக்கப்போகுது. உங்கள் ஆட்சியை கலைப்பதற்கு கனவு வேற காண  வேண்டுமா. கனவெல்லாம் காண வேண்டிய அவசியம் கிடையாது எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்