Skip to main content

கல்வியில் காவி மயத்தை புகுத்தாதே!!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
tiruppur



திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்களின் ஏற்பாட்டில் சென்ற 22ந் தேதி திருப்பூரில் ஆசிரியர்களை பங்கு பெற வைத்து இந்து மத தலைவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. 
 

இதைக் கண்டித்து இன்று 24ந் தேதி மாலை 5 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், திருப்பூர் மாவட்ட  கல்வி அலுவலகத்தை  முற்றுயிடும் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன்  "புராண, இதிகாசப் புரட்டுகளை பள்ளி மாணவர்க்கு பாடமாக போதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கும்பல் பிதற்றுவதற்கு திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 600 ஆசிரியர்களைத் திரட்டி ஏற்பாடு செய்ததைக் கண்டிப்பதாக பேசினார்.  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50 பேர் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களை காவல்துறையினர்  கைது செய்தனர்.


 

சார்ந்த செய்திகள்