Skip to main content

மாசடையும் அடையாறு..! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ..!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

 

environment

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் ஆரம்பித்து திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், சைதாபேட்டை, கோட்டூர்புரம், பட்டிணம்பாக்கத்தில் கடலில் கலக்கும் அடையாறு சென்னையை ஒட்டியுள்ள முக்கியபாசன நீர் ஆதாரமாகவும் விளங்கிவந்தது தற்போது அது மாசடைந்ததால் கூவம்ஆற்றுக்கு இணையாக சாக்கடையும் கழிவுகளையுமே பாயிகிறது ..! ஆதனூரில் ஆரம்பிக்கும் போது சுத்தமான தண்ணீர் ஆற்றில் ஓடுகிறது இது பெரும்பாலும் மழைகாலத்தில் கரைபிரண்டு ஓடும் ..! திருநீர்மலை, திருமுடிவாக்கம் சிப்கார்ட் கம்பெனி கழிவுகள் அப்படியே கலப்பதும் மேலும் சுற்றுவட்டார பகுதி கழிவுநீர் வண்டி கழிவுகள் கொட்டுவதும், நாகிள்கேணி தோல் கம்பேனி கழிவுகள் என கடலை அடையும்வரை வெறும் கழிவுகளே கலப்பத்தால் ஆறுமாசடைந்து அடையாறு என்பது கழிவுநீர் ஆறாக ஓடுகிறது ..! 

 

environment

 

சமீபத்தில் முடிந்த பிள்ளையார் சத்திக்கு சென்னையில் வைக்கப்பட்ட 2500 சிலைகளையும் கடலில் தான் முறையாக கரைக்க வேண்டும் என்பதை அறிந்தும் சில விஷமிகள் தடையை மீறி பிள்ளையார் சிலைகளை அடையாற்றில் கரைத்தனர் இதனால் ஆற்றுப்படுகை மாசடைவது ஒருபுறமிருக்க சிறுவர்கள் அந்த கழிவுநீரின் தீமை அறியாமல் விளையாடிவருவதையும் பத்துநாட்கள் கழிந்தும் அந்தசிலைகள் கரையாமல் நிர்பதையும் நம் கேமராவில் பதிவு செய்து சைதாபேட்டையில் உள்ள மாசுகட்டுபாடு வாரிய அதிகாரியை அனுகியபோது இதுக்கெல்லாம் காவல்காக்க முடியுமா .. என்ற அலட்சியமான கேள்வியை நம்மையே பார்த்தே கேட்டார் மாசுகட்டுபாடு வாரிய சேர்மேன் சாம்புகலோலிகர் ... அவர்துறையின் வேலை என்னவென்றே தெரியாத துறை சேர்மேன் ..?

 

 

சார்ந்த செய்திகள்