Skip to main content

கோவையில் அமலுக்கு வந்தது முழு முடக்கம்!!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
 Complete freeze came into effect in Coimbatore !!

 

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 6,988 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர்  எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்திருக்கிறது.

 

கோவையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்து வருவதால், இன்று மாலை 6 மணி முதல் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம் கடைபிடிக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கே கோவையில் முழுமுடக்கத்தை கோவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் கோவையில் 270 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்