Skip to main content

தாயை தேடி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை - போலீசார் விசாரணை

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Child who fell into water tank in search of mother-Police investigation

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி கம்பர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். மில்லில் வேலை பார்த்து வந்த மணிகண்டனுக்கு மாரீஸ்வரி என்ற மனைவி உள்ள நிலையில் இவர்களுக்கு முத்துலட்சுமி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் பசகேஸ்வரன் என்ற மகனும் இருந்தனர். பசகேஸ்வரன் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்தார். இன்று வழக்கம்போல் மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில் பசகேஸ்வரன் பள்ளிக்கு சென்று விட்டான்.

 

வீட்டில் குழந்தை முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வெளியே மழை வருவதை உணர்ந்த தாய் மாரீஸ்வரி மாடியில் காய வைக்கப்பட்டு இருந்த துணியை எடுக்க சென்று விட்டார். அப்பொழுது விழித்த குழந்தை தாயைத் தேடியுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. பின்னர் அங்கு வந்த தாய் குழந்தையை தேடிய நிலையில் குழந்தை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து தண்ணீர் தொட்டியில் குழந்தை பேச்சுமூச்சு இன்றி கிடப்பதை கண்ட தாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், குழந்தை முத்துலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்