Skip to main content

அதிமுக வேட்பாளர் பெயர் நாளை காலை அறிவிக்கப்படும்-ஓபிஎஸ் 

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக். 21 தேதி  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது.

 

 The AIADMK candidate's name will be announced tomorrow morning-ops


இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான நேர்காணல் முடிந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் நாளை காலை அதிமுக வேட்பாளர் யார் அந்த அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்