Skip to main content

சவுக்கு சங்கருக்கு எதிராக பெண் காவலர்கள் எடுத்த அதிரடி முடிவு!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Action taken by women guards against savukku Shankar

யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் சி.எம்.டி.ஏ. (CMDA) அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கையை கோயம்புத்தூர் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு கடந்த 12 ஆம் தேதி (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர்  மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Action taken by women guards against savukku Shankar

இதற்கிடையே சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட விவகாரத்தில் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் நேற்று (14.06.2024) சோதனை மேற்கொண்டனர். இந்த பரபரபான சூழலில் ஏற்கனவே சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதே சமயம் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியதாக வழக்கு வழக்கறிஞர் முத்து என்பவரின் புகாரில் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோர் மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழக காவல்துறை உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில் பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதற்காக கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் தலைமையிலான  போலீசார் வேனில் அழைத்து செல்கின்றனர். பெண் காவலர்களை இழிவாக பேசியவர்களுக்கு, இதைவிட தகுந்த பாடம் புகட்ட முடியாது என ஏற்கனவே காவல்துறை சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்தில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் தனித்தனியாக புகார் தெரிவித்துள்ளனர். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

சார்ந்த செய்திகள்