Skip to main content

மேச்சேரியில் தொடர் கொள்ளை... அச்சத்தில் மக்கள்!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

 Series of robberies in Mecheri... people in fear!

 

மேச்சேரியில் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் நிகழ்ந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் மக்களிடம் பயத்தை உண்டாகியுள்ளது.

 

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒர்க்ஷாப் காலனியை சேர்ந்தவர் மோகன ப்ரியா. இவரது வீட்டில் நுழைந்த நபர் ஒருவர் மோகன ப்ரியா அணிந்திருந்த தங்க சங்கலியை மிரட்டி பறித்துச் சென்றுள்ளார். அதேபோல் மேச்சேரியில் உள்ள அமரத்தான் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடும்பத்துடன் இரவில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவரது வீட்டில் இருந்த 5,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அதேபோல் மேச்சேரியை சேர்ந்த ராஜா என்பவர் வீட்டிலும் கொள்ளையடிக்க முயற்சி நடந்த நிலையில் இது தொடர்பாக காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மேச்சேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் ஒருபுறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தாலும், இந்த தொடர் கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்