Skip to main content

ஆட்சியில் உள்ள முதல்வரை இறந்தார் என காட்டும் விக்கிபீடியா!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
manoharparrikar

 

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவின் முதலமைச்சராக இருப்பவர் மனோகர் பாரிக்கர். இவர் இறந்த நாள் இன்று என விக்கிபீடியா வின் மாதந்திர நாள் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். 2014ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தபோது, பிரதமர் மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார் மனோகர்பாரிக்கர். 2017ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கோவா மாநிலத்தில் ஆட்சியமைத்தது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த மனோகர்பாரிக்கர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோவா மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். தற்போது முதல்வராக பதவி வகித்து வருகிறார். குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருகிறார்.


 

wiki



இந்நிலையில் விக்கிபீடியாவின் தளத்தின் தமிழ் பக்கத்தில் இன்று மார்ச் 14ந்தேதி இறந்தவர்கள் பட்டியலில் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு தினத்தை பற்றிய தகவல்களை விக்கிபீடியா வழங்கும். அதன்படி இன்று உலகத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், உலகத்தில் முக்கியமானவர்களின் பிறந்தநாள், இறந்தநாள் பற்றிய தகவல்கள் இடம்பெறும். இறந்தவர்கள் வரிசையில் 1955ல் மனோகர்பாரிக்கர் – இந்திய அரசியல்வாதி, கோவா முதல்வர் என வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பெயரை க்ளிக் செய்து உள்ளே சென்றால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 1955 டிசம்பர் 13ந்தேதி பிறந்தார் என்றும், அவரது அரசியல், குடும்பம் பற்றிய தகவல்கள் அதில் கிடைக்கின்றன. அவர் இறந்த ஆண்டு பற்றிய குறிப்பு அதில்யில்லை என்பது குறிப்பிடதக்கது. தவறுதலாக பதிவானதா அல்லது திட்டமிட்டே யாராவது அப்படி உருவாக்கினார்களா என்பது தெரியவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.