Skip to main content

சிறுவன் தந்த சாட்சி; வன்கொடுமை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை 

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Three convicted Testimony given by the boy

 

உத்தர பிரதேச மாநிலம் காஷ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது அஜ்மத் ( பெயர் சித்தரிக்கப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் இருக்கின்றனர். இவர், பழைய துணிகளை விற்று வேலை பார்த்து வந்தார். வேலை நிமித்தமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜெய்ப்பூருக்கு சென்று பழைய துணிகளை விற்று வருவது வழக்கம்.

 

இந்த நிலையில், சம்பவம் நடந்த 2015ஆம் ஆண்டு அன்று முகமது அஜ்மத் வழக்கம் போல் வேலை காரணத்துக்காக ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளார். இதனால், அவருடைய மனைவியும் குழந்தைகளும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இதனிடையே, முகமது அஜ்மத் அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது அங்கு அவருடைய மனைவியும், இரண்டு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். மற்ற 3 மூன்று குழந்தைகளும் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், பதட்டமடைந்த முகமது அஜ்மத் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார்.

 

இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாகக் கிடந்த முகமது அஜ்மத்தின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், காவல்துறையினர் முகமது அஜ்மத் வீட்டை சோதனை செய்த போது அங்கு தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்தது. 

 

அதன் பின்னர், காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், முகமது அஜ்மத்தின் மனைவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து ஸ்க்ரூ டிரைவரை வைத்து கொலை செய்துள்ளனர். அதன் பின்பு அவருடைய இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துள்ளனர். அவர்கள் மூவரையும் கொன்ற பின்பு கொலையாளிகள் அவர்கள் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. 

 

மேலும், அவர்கள்  முகமது அஜ்மத்தின் பக்கத்து வீடுகளுக்கு சென்று விசாரித்தபோது, ​​அதே வீட்டின் முதல் தளத்தில் வசிக்கும் மற்றொரு குத்தகைதாரரின் மகனான சிறுவன்  'நேற்று இரவு 09.45 மணியளவில், அக்ரம் மற்றும் மற்றும் இரண்டு பேர் படிக்கட்டில் ஏறியதாக' கூறினார். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள ஷாகித், அக்ரம், மற்றும் மன்சூர் அலி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள்தான் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்தது. அதன் பின்பு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஆஞ்சல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதை நீதிபதி உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். அதில் அவர், குற்றவாளியான ஷாஹித், அக்ரம் மற்றும் மன்சூர் அலி ஆகியோருக்கு பிரிவு 302 மற்றும் 120 பி ஆகிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்