Skip to main content

இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8013 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 16,765 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தினசரி கரோனா சதவீதம் 1.11 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1 லட்சத்து 2 ஆயிரத்து 601 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 843 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்