Skip to main content

புதுச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் மே -12ல் மறுவாக்குப்பதிவு! 

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

புதுச்சேரி மக்களவை தொகுதிக்குட்பட்ட  தேர்தல் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் வெங்கட்டா நகர் 10 வது வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குகளை நீக்காததால்  மறுவாக்குப்பதிவு நடக்கிறது.  

 

p

 

மறுவாக்குப்பதிவு மே 12 -ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது என்றும்,  மறுவாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடியில் வாக்களிப்போருக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்றும்  ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். மேலும் மாதிரி வாக்குகளை  நீக்காத வாக்குப்பதிவு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு ள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 

இந்த வாக்குச்சாவடியில் ஆண் வாக்காளர்கள் 473 பேரும்,  பெண் வாக்காளர்கள் 479 பேரும் என மொத்தம் 952 வாக்காளர்கள் உள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்