Skip to main content

5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றது மும்பை அணி! 

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Mumbai team wins IPL trophy for the 5th time!

 

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 தொடரில், ஐந்தாவது முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை அணி வென்றுள்ளது. துபாயில், டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இண்டியன்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு, 156 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 157 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு வித்திட்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்