Skip to main content

தொடர்ந்து குறையும் கரோனா... ஆனாலும் ஒரு வருத்தம்!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

jk


இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதேபோன்று, தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விடச் சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது.  

 

இன்று மட்டும் கர்நாடகாவில் 1,280 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 1,060 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமானவர்களின் எண்ணிக்கை 8,58,082 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,95,608 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 25,757 ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 13 பேர் கரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாகக் கரோனாவுக்கு 11,880 பேர் பலியாகியுள்ளனர். ஒருபுறம் கரோனா குறைந்து வந்தாலும் விரைவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட உள்ளது அம்மாநில மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்