Skip to main content

கர்நாடகாவில் வெகுவாகக் குறைந்த கரோனா பாதிப்பு!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

fg


இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விடச் சற்று அதிகமாக இருந்து வந்தது. அதேபோன்று கர்நாடகாவில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகின்றது.  

 

இன்று மட்டும் கர்நாடகாவில் 1,509 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 1,067 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 8,42,560 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,79,150 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 25,708 ஆக உள்ளது. மேலும், இன்று மட்டும் 12 பேர் கரோனா காரணமாகப் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாகக் கரோனாவுக்கு 11,726 பேர் பலியாகியுள்ளனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்