Skip to main content

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு - ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

corona

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தன. மேலும் பல கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

 

தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகிவந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இந்தநிலையில், நேற்று (07.06.2021) 86,498 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியானது. 63 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,03,702 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரேநாளில் 19,448 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பிறகு, முதன்முறையாக தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கு கீழ் தினசரி கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்