Skip to main content

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 25 கோடி... நடிகர் அக்ஷய்குமார் அறிவிப்பு 

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களால் முடிந்த என்ற நிதியை தருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

 Actor Akshay Kumar announces Rs 25 crore for Corona prevention


இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி நிதி உதவி கொடுத்துள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி நிதி உதவி கொடுத்துள்ளார்  மேலும் நெருக்கடியான இந்த தருணத்தில் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என அக்ஷய்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும், அதிகரிக்கும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கச் சுவாச கருவிகள் வாங்கவும்  டாடா குழும அறக்கட்டளை 500 கோடி ரூபாய் வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்