Skip to main content

கர்நாடகா அரசியலில் அதிரடி திருப்பம்! 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம்!

Published on 16/05/2018 | Edited on 16/05/2018
KAR

|
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

இதனிடையே பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியது . இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் 12 எம்.எல்.ஏக்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ், மஜத கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி பிடிக்காத எம்.எல்.ஏக்கள் பலர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

ஆனால், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். உண்மையில் பாஜகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தான் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்