Skip to main content

பெங்களூருவில் ரஜினி... தீவிர ஆலோசனை... 

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

 

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி ''ஜனவரியில் கட்சி தொடக்கம். டிசம்பர் 31இல் தேதி அறிவிப்பு'' என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி ஆகியோர் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார். 

 

அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்ட ரஜினிகாந்த், தற்போது பெங்களூருவிலுள்ளார். வரும் 14ஆம் தேதி வரை அங்கு அவர் தங்கியிருப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 

 

பெங்களூருவில் தங்கியிருக்கும் அவர் கட்சித் தொடங்குவது குறித்து தனது நண்பர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார். 

 

முன்னதாக பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சத்யநாராயணாவை சந்தித்து முன்பு ஆசி பெற்றார். வரும் 14ஆம் தேதி வரை பெங்களூருவில் தங்கி இருக்க முடிவு செய்துள்ள ரஜினி, வரும் 12ஆம் தேதி தனது பிறந்த நாளை சகோதரர் சத்யநாராயணாவுடன் கொண்டாட உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்