Skip to main content

பட்லர், ஸ்டோக்ஸ் இல்லை.. பெங்களூருவுக்கு சவால்? - ஐ.பி.எல். போட்டி #52

Published on 19/05/2018 | Edited on 19/05/2018

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடரின் 52ஆவது போட்டி நடைபெறவுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 

 

Stokes

 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான போட்டியில், கடைசி வாய்ப்பாக இந்த இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி அமைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் இந்த அணிகளில் வெற்றிபெறும் ஒரு அணி, சிறந்த ரன்ரேட்டைப் பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பைப் பெறும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். 

 

கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற பெங்களூரு அணி, அதே வேகத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். டெத் ஓவர்களில் இருந்த சொதப்பலான ஆட்டத்தை ஐதராபாத் உடனான போட்டியின் மூலம் தவிர்த்தது அந்த அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கலாம். அதேசமயம், தனித்து நின்று அடுத்தடுத்த போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சொந்த நாட்டுக்கு திரும்பியதால், அந்த அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.