Skip to main content

இறந்த முதியவரின் சடலம்; 7 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற அவலம்

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
 the corpse of a dead old man; 7 km of misery carried away

இறந்த முதியவரின் உடலை 7 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம், சாலை வசதி இல்லாமல் மலை கிராம மக்கள் வேதனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே  கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது நெக்னாமலை கிராமம். இங்கு  172 குடும்பங்களை சேர்ந்த  750 பேர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்று வரை சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் அன்றாட தேவைக்கும், மருத்துவ தேவைக்கு 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலையாக உள்ளது. அதே நேரத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும் சரி, உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சரி டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது மலை கிராம மக்களின் போராட்டம் நடத்தினர். அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பதில் தனிப்பட்ட முறையில் சட்டமன்ற தேர்தல் வந்ததால் மண் சாலை அமைத்துக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின்  திமுக அரசு தார்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியது. ஒன்றிய அரசில் வனத்துறை சட்டங்களை பாஜக அரசு திருத்தி பழஙம்குடியின மக்களை மலையில் இருந்து துரத்தும் வகையில் இருப்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. 

இதனால் நெக்னாமலை மக்கள் முழு சாலை வசதி இல்லாததால் உடல் நலம் குன்றியவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் மலை கிராமத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் முத்து உடல்நிலை சரியில்லாமல் வேலூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மே 2 ஆம் தேதி மதியம் அவர் திடீரென உயிரிழந்தார். அந்த முதியவரின் உடலை சொந்த ஊரான நெக்னாமலை கிராமத்திற்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தியில் கொண்டு வந்தனர். சாலை வசதி சரியாக இல்லாததால் வாகனம் நின்றது. உடலை கீழே இறக்கி சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்றனர். 

சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை  வழங்கினார். அந்த மண் சாலையில் கற்கள் பெயர்ந்து  ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் உள்ளது.சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தங்கள் கிராமத்திற்கு சாலைவசதி இல்லாமல் இருக்கிறது என மலை கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்