Skip to main content

பெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்?

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

இஸ்லாமிய நடவடிக்கைகளான முத்தலாக், ஹலாலா, பலதாரமணம் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இப்போது, பெண்குழந்தைகளின் பெண்உறுப்பு அறுவைச் சிகிச்சையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தலாக் சொல்ல வேண்டும் என்று உள்ள விதியை மாற்றி, ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுக்கும் வழக்கம் இருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கு உரிய நிக்காஹ் ஹலாலா என்ற நடைமுறையையும், பாலிகாமி என்ற பலதார மண நடைமுறையையும் வினா எழுப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

 

sunnath



இஸ்லாம் மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த நடைமுறை பழக்க வழக்கங்களில் மனித உரிமை, பெண்ணுரிமை என்ற பேரில் பாஜக அரசு பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தில் ஆண் குழந்தைக்கு சுன்னத் எனும் சிறு ஆபரேசன் செய்யப்படுவது வழக்கம். ஆணுறுப்பின் முன்தோலை வெட்டி நீக்குவதைத்தான் இப்படி சொல்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித் தொற்று தவிர்க்கப்படும் என்றும், எய்ட்ஸ் தடுக்கப்படும் என்றும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 


ஆனால், பெண் குழந்தைகளுக்கும் இதேபோன்று பெண்ணுறுப்பில் கிளிட்டோரியஸ் எனப்படும் பகுதியை வெட்டி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கட்னா, காஃப்த் என்று பெயர். இதுவும்கூட பெண்ணுறுப்பு சுத்தத்திற்காகவே செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்குழந்தைகளின் பெண்உறுப்புகளை சிதைப்பதை எதிர்த்து சுனிதா திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திரா ஜெய்சிங்கும், மனுவை எதிர்த்து மத சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சார்பில் அபிசேக் சிங்வியும் வாதாடினார்கள்.

  sunnath for girls



சிங்வி தனது வாதத்தில், இஸ்லாமிய பெண்குழந்தைகளின் பெண் உறுப்பில் உள்ள மிகச்சிறிய பகுதியை வெட்டி எடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது என்றார். மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆண்குழந்தைகளுக்கு செய்யப்படும் சுன்னத் எனப்படும் அறுவைச் சிகிச்சை எய்ட்ஸ் கிருமி தாக்குதலில் இருந்த பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண்குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான சுதந்திரமும் உரிமையும்கூட பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதுதான் என்றார்.

 

 


வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் உடலோடு ஒட்டிய பகுதியை மத நடவடிக்கை என்ற பேரில் ஏன் வெட்டி எடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகள் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கும் போக்ஸா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. மேலும் தாவூதி போராஹ் வகுப்பினர் மத்தியில் இருந்த இதுபோன்ற பழக்கம் ஏற்கெனவே குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சுகாதாரத்துறை, சமூகநீதித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும், மஹாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய நான்கு மாநில அரசுகளும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


 

 

 

Next Story

ஹிந்து மாணவிகளுடன் பேசிய இஸ்லாமிய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to the Muslim student who spoke with the Hindu girls

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

உ.பி. அரசின் மதரஸா சட்டம்; உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
 Interim ban on the decision of the High Court on UP Govt Madrasa Act

அரபு, உருது, பாரசீகம், இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்பு மதரஸா கல்வி ஆகும். அதில், உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் இந்த மதரஸா கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் வகையில், அம்மாநில அரசு, ‘மதரஸா கல்விச் சட்டம் 2004’ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. 

இந்த சட்டத்தின் மூலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 25,000 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 16,000 மதரஸாக்கள் அங்கீகாரம் பெற்றவை. இந்த மதரஸாக்களில் சுமார் 17 லட்சம் இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் சுமார் 10,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மதரஸா கல்வி வாரியத்தால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டும், டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்பட்டும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதனிடையே, இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் மதரஸா கல்வி நிறுவனங்கள் மீது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அன்சுமன் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. 

இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சட்டம் தொடர்பாக பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘தனது கடமைகளை ஆற்றும்போது, மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது. மதம் சார்ந்த கல்விக்கு வாரியத்தை உருவாக்கவோ அல்லது பள்ளிக் கல்விக்கான வாரியத்தை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தத்துவத்திற்காக மட்டும் அமைக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசு அப்படி செய்தால், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். 

எனவே, உத்தரப்பிரதேச மாநில அரசின் மதரஸா கல்விச் சட்டம் 2004 என்பது அரசியல் சாசனத்துக்தே எதிரானது. இந்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஆகையால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை, மற்ற பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று கூறி இந்த சட்டத்தை ரத்து செய்தது. 

இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று (05-04-24) விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மதரஸாக்களை ஒழுங்குபடுத்தவே வழக்கு தொடரப்பட்டது. அதில், மதரஸாக்கள் மதச்சார்ப்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்காக மதரஸாக்கள் சட்டத்தை ரத்து என்று தீர்ப்பளிக்க முடியாது. 

மேலும், வாரியத்தை அமைப்பது மதச்சார்பின்மையை மீறும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது சரியானது அல்ல. எனவே, மதரஸா சட்டம் செல்லாது எனவும், மதரஸா மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 2வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.