Skip to main content

ரூபாய் 20 கோடி எங்கே? வேலுமணியை லெஃப்ட் & ரைட் வாங்கிய ஜெயலலிதா!!!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

ddd

 

சுகுணாபுரம் பழனிச்சாமி வேலுமணி, ‘அமைதிப்படை' படத்தில் இயக்குநர் மணிவண்ணன் படைத்த ‘நாகராஜசோழன்' என்கிற அரசியல்வாதி கேரக்டரின் அசல் வடிவம். மிகமிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்த வேலுமணி, இன்று சசிகலாவைவிட அதிக சொத்து மட்டுமல்ல... அதிகாரமும் படைத்த நபர். இவரை எதிர்த்துப் பேச எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்.ஸும் கூட பயந்து நடுங்குவார்கள்.

 

அரசியலில் ஆரம்ப கட்டத்தில் தன்னை வளர்த்துவிட்ட கே.டி.ராஜு என்கிற எம்.எல்.ஏ., கிணத்துக்கடவு தாமோதரன் என்கிற அமைச்சர் ஆகியோரை சரி செய்து கீழே தள்ளிவிட்டு எம்.எல்.ஏ.வான வேலுமணி, சசிகலாவின் உறவினர் ராவணன் தயவில் அமைச்சரானார்.

 

ddd

 

ஹுண்டாய் கம்பெனியில் ஜெ.வுக்குத் தெரியாமல் 20 கோடி ரூபாய் வாங்கினார் என ஜெ.வின் செயலாளரான ஷீலா பிரியா கண்டுபிடித்தார். அதனால் அவரை பதவியிலிருந்து நீக்கிய ஜெ.விடம், "அந்த 20 கோடியை சசியின் உறவினர் டாக்டர் வெங்கடேஷிடம் கொடுத்தேன்' என அப்படியே போட்டுக்கொடுத்தார் வேலுமணி. பின்னர் சசிகலாவின் காலில் விழுந்து சமாளித்து, மறுபடியும் அமைச்சரான வேலுமணியையும் அவரது மேனரிசத்தையும் அடிக்கடி கிண்டலடித்து ஜெ. சிரிப்பாராம்.

 

கடைசியாக சசியின் குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரனிடம் மோதினார் வேலுமணி. ஒட்டுமொத்த அதிமுகவினரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சசிகலாவுக்கு எதிராக பாஜகவுக்கு ஆதரவாக கொண்டுபோய் நிறுத்தி, தனது தொகுதியில் ஆசிரமம் வைத்துள்ள சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆதரவுடன் பவர்ஃபுல்லாக வலம்வந்த வேலுமணிக்கு ரெய்டு செக் வைத்தது திமுக அரசு.

 

ஆரம்பத்தில் குனியமுத்தூர் நகராட்சித் தலைவராக அரசியல் வாழ்வைத் துவக்கிய வேலுமணி, குடிநீர் கனெக்ஷனுக்கு கட்டிங் கேட்டுதான் தனது ஊழல் கணக்கைத் துவக்கினார். இன்று சென்னையில் மிக விலையுயர்ந்த அபார்ட்மெண்ட்டான பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரி ஈஊஊ இதஞந ஞசஊ 74 என்கிற குடியிருப்பில் ஆறு பிளாட்டுகளை வைத்துள்ளார். "ஒரு பிளாட்டின் விலை 35 கோடி ரூபாய் என 210 கோடி ரூபாய்க்கு ஒரே இடத்தில் சொத்து வாங்கியுள்ளார்' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

ddd

 

"ஜெ.'வையே பதம் பார்த்தது சொத்துக் குவிப்பு வழக்கு என்பதால் வேலுமணி இதற்குத்தான் அதிகம் பயந்தார். வேலுமணிக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதியும், அறப்போர் இயக்கமும் போராடினார்கள். திமுக, கவர்னரிடமும் வேலுமணியின் ஊழல் பட்டியலை அளித்தது. அறப்போர் இயக்கத்துடன் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டது.

 

வேலுமணியோ அறப்போர் இயக்கத்தின் மீதும், ஊழல்களை வெளியிட்ட பத்திரிகைகளின் மீதும் வழக்கு போட்டே சரிக்கட்டலாம் என நினைத்தார். அறப்போர் இயக்கத்தின் மேல் 32 வழக்குகளைப் போட்ட வேலுமணி, பத்திரிகையாளர்கள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்தார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையைத் தனது கைப்பாவையாகவே மாற்றினார். டி.ஐ.ஜி.யான ராதிகா, எஸ்.பி.யாக இருக்கும் சண்முகம், பொன்னி ஆகியோரை வைத்தே விளையாடினார். தினமும் வேலுமணியிடம் தொலைபேசியில் பேசும் ராதிகா, வேலுமணி மீது விசாரணை நடந்துங்கள் என உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்குப் பதிலாக அவர்மீது எந்தத் தவறும் இல்லை என சான்றிதழ் கொடுத்தார்.

 

திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தலைவராக, அமித்ஷாவையே கைது செய்த தமிழக அதிகாரியான கந்தசாமி பொறுப்பேற்றார். அவர் "ராதிகாவை மாற்றுங்கள்” என டி.ஜி.பி.யாக இருந்த திரிபாதியிடம் கேட்டார். அவர் "முடியாது' என மறுத்தார். இது காவல்துறைக்குள் சர்ச்சையானது.

 

ddd

 

ராதிகா தற்போது திருச்சி பகுதி சட்டம் - ஒழுங்கு அதிகாரியாக உள்ளார். எஸ்.பி. சண்முகத்தை இதுவரை மாற்றவில்லை. "ராதிகா, திருச்சியில் இருந்தவாறே சண்முகத்தின் துணையுடன் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவான வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்' என நடப்பவற்றைச் சொல்கிறார்கள் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள்.

 

மத்திய பாஜக. அரசில் அமைச்சராக உள்ள பியூஸ் கோயல் உதவியுடன் வேலுமணியின் மகன் படித்து ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ்நாட்டில் சேர்த்த பணத்தை முதலீடாக செய்தார் என்பதை, அவரது ஆடம்பர வாழ்வுடன் அட்டைப்படமாக வெளியிட்டது நக்கீரன். அந்த முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை ஒரு இடத்தில் வைக்காமல் கண்டெய்னர் லாரிகளில் வைத்து நிரந்தரமாக தமிழ்நாட்டையே சுற்றிவர வைத்திருக்கிறார் வேலுமணி.

 

இந்நிலையில், கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை, "திமுகவும் அறப்போர் இயக்கமும் வேலுமணிக்கு எதிராக கொடுத்த புகாரில் உண்மை இருக்கிறது. மத்திய ஆடிட்டர் ஜெனரல் கொடுத்த அறிக்கைப்படி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்தது. ஹோட்டல், நகைக்கடை, கட்டுமான நிறுவனங்கள், என்ஜினியரிங் கம்பெனிகள் என 17 நிறுவனங்கள் மூலம் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், சந்திரபிரகாஷ், சந்திரசேகர் உள்ளிட்ட ஏழு பேர் வேலுமணி ஆதரவுடன் உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்து சுமார் 810 கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார்கள்'' என முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

 

லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைகளில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் நடந்த ஒப்பற்ற முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த முறைகேடுகளை செய்த காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த கார்த்திகேயன், பிரகாஷ், பாஸ்கரன் போன்ற அதிகாரிகள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் சாட்சிகளாக வருவார்கள். "வேலுமணி சொன்னார்... செய்தோம்' என சொல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... திமுக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில் உள்ளாட்சித்துறை முறைகேடுகளும் இடம்பெற்றன. அடுத்து ரெய்டுதான் என ராதிகா மூலம் முன்கூட்டியே அறிந்த வேலுமணி, தனது அபார்ட்மெண்ட்டிலிருந்து எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்து தங்கினார். காலை எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் "என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க?' என ஜோக்கடித்து சிரித்திருக்கிறார் வேலுமணி.

 

ஜெ. வீட்டிற்கு சோதனை செய்ய போலீசார் போனபோதுகூட கூடாத கட்சிக்காரர்களை வேலுமணியை போலீசார் ரெய்டு செய்தபோது வேலுமணி திரட்டியிருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்கள், வழக்கறிஞர்கள், கட்சித் தொண்டர்கள் என ஏதோ ஒரு மாநாட்டிற்கு கூட்டிய கூட்டம் சேர்த்தார். 65 இடங்களில் நடந்த ரெய்டில் வெறும் 13 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துக்கள் குறித்த ஆவணங்களுடன் திரும்பியது லஞ்ச ஒழிப்புத்துறை. "வேலுமணி மீது போட்ட வழக்கு மிகவும் நேர்த்தியானது. அதற்கு பெரிய புதிய ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஏற்கனவே கொடுத்த புகார் தொடர்பான கூடுதல் ஆதாரங்களை, இன்றைய திமுக அரசு அளித்த ஆதாரங்களை எளிதாக அரசு திரட்டிவிடும்'' என்கிறார் அறப்போர் இயக்கம் ஜெயராமன். ஆனால் "பல ஆயிரம் கோடிகளை வைத்துள்ள வேலுமணியின் வீடுகளில் வெறும் 13 லட்சமா கிடைத்தது?' என திமுகவினர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

வேலுமணி, "திமுக அரசின் இந்த நடவடிக்கை தோல்வி, நான் மிஸ்டர் க்ளீன்' என டி.வி.க்களில் பேசுகிறார். அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு இயல்பாக இருப்பதுபோல வெளிப்படுத்துகிறார்.

 

லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமியிடம் ஸ்டாலினும் காட்டமாகப் பேசியிருக்கிறார். வேலுமணியுடனான ஆடு-புலி ஆட்டத்தில் திமுக ஒரு முக்கியமான காயை, ரெய்டுகள் மூலம் எழுப்பியிருக்கிறது. "இது ஆரம்பம்தான். லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள வேலுமணிக்கு விசுவாசமான கறுப்பு ஆடுகளைக் களைந்துவிட்டு முழு முதல் தாக்குதலை லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி தலைமையில் மேற்கொள்ளும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றன காவல்துறை வட்டாரங்கள்.

படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.