Skip to main content

ஒரு நாளைக்கு 10 வாட்டர் கேன்கள் முதல் மணிக்கு 1,000 வாட்டர் கேன்கள் வரை - WaterOnClick.com நிறுவனத்தின் சாதனைப் பயணம்!

Published on 24/01/2022 | Edited on 14/02/2022

 

பரக

 

ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால் கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. எனவே, சுத்தமான குடிநீரைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டுமென்பது இன்று இன்றியமையாத அத்தியாவசியம்.

 

இந்நிலையில், கடந்த 7 வருடங்களாக மக்களுக்காகத் தரமான தண்ணீரை தருகிறது WaterOnClick.com (வாட்டர் ஆன் கிளிக்) நிறுவனம். மக்களுக்குத் தண்ணீரைத் தரமாகக் கொடுக்க வேண்டும் என ஐ.டி (IT) வேலையை உதறிவிட்டு வந்திருக்கிறார்கள், கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார். இரு நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த தொழில் இப்போது சென்னை தாண்டி வெளி மாவட்டம், வெளி மாநிலம் எனப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய அனுபவங்களை அவர்களிடம் கேட்டோம்.

 

முதலில் பேசிய சதீஷ்குமார், "கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது பற்றி யாருக்கும் தெரிவதில்லை. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. கேன்களை குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பழைய கேன்களில் தான் நிரப்புகிறார்கள். நாள்பட்ட கேன்களில் தண்ணீரை அடைக்கும்போது அதன் மூலம் பாக்டீரியாக்கள் உருவாகும். இப்படிப்பட்ட தண்ணீரைத் தான் பெரும்பாலான மக்கள் குடிக்கின்றனர். இதனால், வயிற்றுப்போக்கு, சுவாச நோய், எலும்பு நோய், சிறுநீரக நோய், தோல் புற்று நோய்கள் உருவாகிறது. 

 

நீண்ட நாட்களாகவே இதைத்தடுக்க மக்களுக்குத் தரமான தண்ணீரைத் தர வேண்டும் என நானும் எனது நண்பர் கார்த்திகேயனும் ஆலோசித்துக் கொண்டிருந்தோம். 2013-ம் ஆண்டு இருவரும் ஐ.டி வேலையிலிருந்து வெளியேறி இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். நாங்கள் நினைத்திருந்தால் சொந்தமாக ஒரு வாட்டர் பிளாண்ட் அமைத்து தண்ணீர் கேன் சப்ளை செய்திருக்கலாம். ஆனால் மற்றவர்கள் அப்படியேதான் விற்பனை செய்யப்போகிறார்கள். அவர்களை முறைப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதனால்தான் தண்ணீரை வழங்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரு நிறுவனமாக உருவாக்கினோம். இருவருக்கும் கணினித்துறை பழக்கப்பட்டது என்பதால் நிறுவனத்தை உருவாக்குவது மற்றும் அதற்கு தேவையான WaterOnClick.com என்ற இணையதளம் உருவாக்குவது இரண்டும் இன்னும் எளிதானது. 

 

ுபர

 

2013-ல் ஆரம்பித்த எங்கள் நிறுவனம் சென்னை வேளச்சேரி பகுதியில் மட்டும் தண்ணீரை சப்ளை செய்து வந்தோம். 2014-15-ம் ஆண்டுக்குப் பின்னர் எங்களது நிறுவனத்தை விரிவுபடுத்தினோம். இப்போது பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 15+ முக்கிய நகரங்களில் வாட்டர் ஆன் கிளிக் சர்வீஸ் செயல்பட்டு வருகிறது. சுமார் 200 விற்பனையாளர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 10 வாட்டர் கேன்கள் சப்ளை செய்து கொண்டிருந்த எங்கள் நிறுவனம் இப்போது ஒரு மணி நேரத்துக்கு 1,000 வாட்டர் கேன்களுக்கு மேல் சப்ளை செய்து கொண்டிருக்கிறது." என்றார்.

 

jlk

 

பின்னர் தொடர்ந்த கார்த்திகேயன், "குடிநீரை வடிகட்டி சுத்திகரிப்பதில் 5-7 விதிமுறைகளைக் கையாள வேண்டும். அதன் பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றைச் செய்வதில்லை. இன்னொரு விஷயம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இப்போது 20-30 ரூபாய் கொடுத்து வாங்கும் தண்ணீரில்தான் அத்தனை அசுத்தங்களும் இருக்கின்றன. எல்லாவற்றையும் சரியாகச் செய்து ஒரு கேனை 20-30 ரூபாய்க்கு தர முடியாது. இதைக் களைவதற்காகத்தான் நாங்கள் நிறுவனமே ஆரம்பித்தோம். எங்களுடன் தரமான தண்ணீர் விற்பனையாளர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். நாங்களே அந்த கம்பெனிகளுக்குப் போய் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து அதன் பின்னர்தான் எங்கள் நிறுவனத்தின் மூலம் தண்ணீரை சப்ளை செய்ய சொல்வோம். 

 

மக்களும் WaterOnClick.com இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக தங்களுக்குத் தேவையான தண்ணீரை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் கொண்டுவந்து சப்ளை செய்கிறோம். எங்கள் மூலம் தண்ணீரை விற்பனை செய்ய விருப்பமுள்ள விற்பனையாளர்கள் எங்களை அணுகலாம். இறுதியாக மக்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான் - கேன் வாட்டரில் மேல் மூடியில் சீல் (Seal) மற்றும் ஐ.எஸ்.ஐ (ISI) முத்திரை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்." என்றார்.

 

WaterOnClick குறித்த மேலும் தகவல்களுக்கு - https://wateronclick.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்!

 

 

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.