Skip to main content

அன்று அண்டர்டேக்கரின் தம்பி...இன்று அரசியலில் மேயர்...

Published on 03/08/2018 | Edited on 03/08/2018

 

அமெரிக்கவைச் சேர்ந்த பொழுதுபோக்கு மல்யுத்த நிகழ்ச்சி WWEன் மல்யுத்த வீரர் கேன், இவர் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் பிரபலமான வீரர்களில் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவின் டென்னெஸ்ஸீ மாகாணத்தின் க்நோக்ஸ் கவுண்டி என்னும் நகரத்தின் மேயராக நேற்று இரவு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கேனின் உண்மையான பெயர் க்ளென் ஜாகோப்ஸ். ரிபப்ளிக் என்னும் கட்சி சார்பாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து டெமோக்ரடிக் கட்சியை சேர்ந்த லிண்டா ஹனே போட்டியிட்டார். க்ளென், லிண்டாவைவிட 66 சதவீத வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார். இவர் இத்தேர்தலுக்கு போட்டியிடுவதற்தாக ஆரம்பகட்ட தேர்தல் கட்சிக்குள்ளே நடக்கும், அத்தேர்தலில் 23 வாக்குகளே பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பும் ரிபப்ளிக் கட்சிதான்.

 

kane

 

இந்த வெற்றியைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஒரு நகரின் மேயாராகும் இரண்டாவது WWE மல்யுத்த வீரராகிறார் கேன். இவருக்கு முன்னர் மின்னசொட்டா மாகாணம், ப்ரூக்ளின் நகரின் மேயராக 1991-1995ஆம் ஆண்டுவரை ஜெஸ்ஸி வென்துரா பதவிவகித்தார். பின்னர், மின்னசொட்டா மாகாணத்தின் கவர்னராகவும் 1999-2003 ஆம் ஆண்டு வரை பதவிவகித்தார்.

 

jesse ventura

 

க்ளென் ஜாகோப்ஸின் இந்த வெற்றிக்கு முதல் காரணமாக இருப்பது அவர் பிரபலமான மல்யுத்த வீரர் என்பதே. அவர் 1995ஆம் ஆண்டில்தான் முதன் முதலில் WWF(தற்போது WWE) என்று சொல்லப்பட்ட மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் அவ்வளவு பிரபலமாகாமல் இருந்தவர், 1997ஆம் ஆண்டு கேன் என்ற பெயரில் அதுவும் அண்டர்டேக்கரின் சைக்கோடிக் தம்பி என்று ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, இவரும் பிரபலமாகத் தொடங்கினார். இந்த மல்யுத்த நிகழ்ச்சி வரலாற்றிலேயே அண்டர்டேக்கருக்கும் இவருக்குமான பகை, போட்டி பலரால் பேசப்பட்டிருக்கிறது. அதேபோல இவர்கள் இருவரும் இணைந்தும் டேக் டீம் விளையாடியுள்ளனர். அந்த டேக் டீமின் பெயர் 'பிரதர்ஸ் ஆப் டெஸ்ட்ரக்ஷன்' (அழிவின் சகோதரர்கள்). ’ஸீ நோ ஈவில்’ என்கிற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார்.

 

under taker

 

பிரபல சூப்பர் ஸ்டார்களான ஸ்டீவ் ஆஸ்ட்டின், ஸ்டோன் கோல்டு, ராக் போன்ற வீரர்களுடன் களத்தில் மோதி வெற்றிபெற்றுள்ளார். அதிக வருவாய் ஈட்டிய வீரரிலும் இவரது பெயர் இருக்கிறது. 'சோக்ஸ் ஸ்லாம்' என்னும் ஸ்மாக் இவர் பாணியாகும், கழுத்தை பிடித்து மேலே தூக்கி கீழே அடிப்பதுதான். கேனின் தேர்தல் பரப்புரைக்காக அண்டர் டேக்கரை அழைத்து பிரச்சாரம் செய்துள்ளார். மேலும், இவரது பிரச்சாரத்தில் குறைந்த வரி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று முழு அரசியல்வாதியாகவே மாறி உறுதியளித்துள்ளார். மேயர் பதவியில் பிரச்சாரம் செய்து வரும் போதே இந்த ஆண்டு மே மாதத்தில் WWE ல் டேனியல் பிரையனுக்கு உதவியாக சண்டையிட வந்தார். பின்னர் அவருடன் கைகோர்த்து டேக் டீம் சாம்பியன்ஷிப்புக்காக போட்டியிட இருந்தார். இதுவும் ஒரு வகையில் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். இவ்வளவு ஏன் தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்புமே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக WWEல் கலந்துகொண்டு இருக்கிறார். தமிழக தேர்தல்களில் சினிமாக்காரர்கள் பலர் அரசியல்வாதியாக உருமாறுவதுபோல், வருகின்ற அமெரிக்க தேர்தல்களில் WWE வீரர்களான ஜான் சீனா, ராக் எல்லாம் மாறிடுவாங்களோ...    

 

           

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார். 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.