Skip to main content

சந்தேகத்திற்கு ஆளான சிவாஜி-தேவிகா ஜோடியும் கமல்-ஸ்ரீதேவி ஜோடியும்! பழைய ரீல் #5 

Published on 21/07/2018 | Edited on 21/07/2018
pazhaya reel 5



ரீலுக்காக ஜோடி போட்டாலும், அதில் ஓர் ரியல் தன்மை மிளிர்ந்தால், அந்த ஜோடி பொருத்தமான ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை வழக்கம். நடிகர் திலகம் சிவாஜி- பத்மினி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி. அதேபோல சிவாஜி- தேவிகா ஜோடியும் ரசிகர்களால் விரும்பப்பட்டது.

 

 


‘வானவில்’ என்கிற நாடகத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தே தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் தேவிகா. தேவிகாவின் முதல் சினிமா கதாநாயகனாக சிவாஜி அமைந்ததாலோ என்னவோ, இந்த ஜோடி நடித்த படங்களில் அந்நியோன்யமான கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கும். அதனாலேயே இந்த ஜோடியைப் பற்றி அரசல்புரசலாக கிசுகிசுவும் கிளம்பியது இண்டஸ்ரியில். இது தேவிகாவின் தாயாரின் காதுகளுக்கும் எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த தேவிகா தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம்,

“ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார்.

“அப்படியெல்லாம் இல்லையம்மா” என தேவிகா பதில் சொல்வது வழக்கமாம்.

  siva devi



ஆனால் கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க தேவிகாவின் தயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், “என்ன... சிவாஜிய கல்யாணம் பண்ணிக்கப்போறியா?” ‘கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என கேள்விகளால் துளைத்தவர் உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் சிவாஜிய கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். இதனால் தேவிகாவுக்கும், அவரின் அம்மாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ஆனால் 
தேவிகா மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.

மதுரை ஸ்ரீமுருகன் டாக்கீஸ் குடும்பத்தைச் சேர்ந்த உதவி இயக்குநராக இருந்த தேவதாஸை திருமணம் செய்துகொண்டார் தேவிகா. சிவாஜியை “சார்” என்று அழைத்து தன் குரு ஸ்தானத்திலேயே வைத்திருந்தார் தேவிகா... கடைசிவரை.

 

kamal sridevi




கமல்- ஸ்ரீதேவியின் ஜோடிப் பொருத்தம் 80-களில் ரசிகர்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டது, கொண்டாடப்பட்டது. உண்மைக்கு சரி நிகரான காதல் ஜோடியாக இவர்களின் நடிப்பில் மென்மையும், நளினமும், வசீகரமும் வெளிப்பட்டது.
தேவிகாவுக்கு சிவாஜி போலவே, ஸ்ரீதேவிக்கு முதல் சினிமா கதாநாயகனாக கமல் அமைந்ததாலோ என்னவோ இந்த ஜோடியும் நடிப்பில் அந்நியோன்யத்தை அள்ளி வழங்கியது. அதனாலேயே இந்த ஜோடியைப்பற்றி கிசுகிசுவும் கிளம்பியது இண்டஸ்ட்ரியில்.

இது ஸ்ரீதேவியின் தயாரின் காதுகளுக்கு எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த ஸ்ரீதேவி, தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம், “ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார். “அப்படியெல்லாம் இல்லையம்மா” என ஸ்ரீதேவி பதில் சொல்வது வழக்கமாம். ஆனால், கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க ஸ்ரீதேவியின் தாயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில்... “என்ன, கமலஹாசனை கல்யாணம் பண்ணிக்கப்போறியா?”, "கல்யாணம் பண்ணிக்கப் போறியாமே?” என கேள்விகளால் துளைத்தவர், உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் கமல்ஹாசனை கல்யாணம் பண்ணிக்க திட்டம்போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். ஆனால், அதற்குள் ஸ்ரீதேவி பாலிவுட் சென்று பிரபலமானார். அமமாவின் எதிர்ப்பை மீறி போனிகபூரை திருமணம் செய்துகொண்டார்.

 

 


“27 படங்களில் நானும், ஸ்ரீதேவியும் சேர்ந்து நடித்தோம். அவரை மறக்கவே முடியாது. எங்களுக்குள் நிஜத்திலும் காதல் இருப்பதாக ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது. நானும், ஸ்ரீதேவியும் திருமணம் செய்துகொள்வோம் என சந்தேகப்பட்டார் ஸ்ரீதேவியின் தாயார்” என கமல் பின்னாளில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். சிவாஜியை தேவிகா அழைத்தது போலவே, கமலை “சார்” என்றுதான் அழைத்து வநதார் ஸ்ரீதேவி, கடைசிவரை.
  

 

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; குழு அமைத்த கமல்ஹாசன்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Parliamentary elections approaching; Kamal Haasan announce Team

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைப்புக் குழு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏ.ஜி. மௌரியா, தங்கவேலு, அருணாச்சலம் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'அது ஒரு கருவிதான்'-பணம் குறித்து கமல்ஹாசன் பேச்சு

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

'It's a tool' - Kamal Haasan talks about money

 

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பணம் குறித்து உரையாற்றிய பேச்சு இணையத்தில்  வைரலாகி வருகிறது.

 

கமல்ஹாசன் பேசியதாவது, ''என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். மூச்சு இல்லாமல் 40 செகண்ட் அல்லது ஒரு நிமிடம் தாங்குவோம். தண்ணி இல்லாமல் ஆறு ஏலு நாட்கள் தாங்குவோம். சாப்பாடு இல்லாமல் பத்து நாட்கள் தாங்குவோம். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதையெல்லாம் வாங்குவதற்கு அது ஒரு கருவி. ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்களுடைய இஷ்டம். அதை நீங்கள் பிளேடு கிட்டப் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெறும் கருவி தான். அதுவா சொல்லும் வேணாம் தாடிய கொஞ்சம் நீளமாகவே வச்சுக்கோ அல்லது முழுவதும் சவரம் பண்ணிக்க, இல்ல மீசை மட்டும் வச்சுக்க என பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவுதான் பணமும். அது பேசாமடந்தை.

 

நான் சினிமா நடிக்க வந்த பொழுது இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் இருந்தனர். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி. அதன் பிறகு தான் இப்படி ஒரு கேலக்ஸி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு காரணம் எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து பொழிப்புரை சொல்லி அனுப்பி வைத்தவர் சிவாஜி சார் தான். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இன்னொரு சிவாஜி ஆகவேண்டும் என நான் நினைக்கவே இல்லை. இன்னொரு சிவாஜி வருவாரா என்று கூட கேட்கவில்லை'' என்றார்.